இந்த கீரையின் நீரை குடித்தால் ,சுகர் பேஷண்ட் என்ற பேரையே அழிக்கலாம்

 

இந்த கீரையின் நீரை குடித்தால் ,சுகர் பேஷண்ட் என்ற பேரையே அழிக்கலாம்

சிவரிக்கீரை கொத்துமல்லி தழை போன்று தோற்றத்தில் இருக்கும் கீரை வகையாகும். இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற கிழக்கு ஆசியாவில் வளர்பவை. தற்போது இந்தியாவிலும் பரவலாக விளையச் செய்கிறோம். இதில் காணப்படும் சத்துக்கள் அளவிட முடியாது. அத்தனை நன்மைகளை இந்த கீரையை எல்லாரும் இப்போது உண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

நீங்கள் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளை விட 7 மடங்கு கொலஸ்ட்ராலை குறைக்கக் கூடியது. விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி, பொட்டாசியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், சோடியம், அமினோ அமிலங்கள் என ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சிவரிக்கீரையில் அதிகமாக காணப்படுகின்றன.

சிவரிக்கீரை சுவையில் மட்டுமல்லாமல், இது நம் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மையை தருகிறது. இக்கீரையை உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதனுடன் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த கீரையின் நீரை குடித்தால் ,சுகர் பேஷண்ட் என்ற பேரையே அழிக்கலாம்

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.குறிப்பாக இந்தியா சர்க்கரை வியாதியின் தலைநகரம் என அழைக்கும் அளவுக்கு இந்தியா முழுவதும் சர்க்கரை வியாதி நிறைந்தவர்கள் காணப்படுகின்றனர். சர்க்கரை வியாதி இந்தியாவில் குறிப்பாக ஆறரை கோடி மக்களிடையே உள்ளதாகச் சொல்கின்றனர். சர்க்கரை வியாதி என்பது இரு வகைப்படும் ஒன்று டைப்-1 உடலில் இன்சுலின் சுத்தமாகச் சுரக்க விடாமல் தடுப்பது. டைப் 2 என்பது இன்சுலின் அளவு குறைவாகச் சுரக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவில் சிவரிக்கீரையை சேர்த்து சாப்பிட்டால் அது அவர்களுக்கு நல்ல மருந்தாக இருந்து வருகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிவரிக்கீரையில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது.

அஜீரணம் மற்றும் வாயு, வயிற்று பிரச்சனை நோய்களை சிவரிக்கீரை குணப்படுத்தும். வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகளும் வராமல் தடுக்கிறது.

மேலும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமானால் சிவரிக்கீரை சாறு போல் அரைத்து அதனை தோல் மீது தடவ வேண்டும். அப்படி செய்தால் சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

சிவரிகீரையை சூடான பாலில் சேர்த்து சாப்பிட்டால் நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மேலும் சிவரிக்கீரையுடன் வேப்பம் பொடி, சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடும் போது ரத்தத்தை சுத்திகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள், வீட்டு வைத்தியங்களையும் எடுத்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். எப்படியென்றால் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து சிவக்கீரையுடன் தேநீர் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் முற்றிலும் குணமாக வாய்ப்புள்ளது.

நீங்கள் தொடர்ந்து 7 நாட்கள் சிவரிகீரையை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள தாலைட் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் தேவையில்லாமல் டென்ஷன் படுபரகள் சாப்பிட்டால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.