மூணு தலைமுறையா இருக்கிற மூல நோயை கூட மூணே நாளில் விரட்டும் இந்த இலை

 

மூணு தலைமுறையா  இருக்கிற மூல நோயை கூட மூணே நாளில் விரட்டும் இந்த இலை

மூல நோய். கடுமையான மலச்சிக்கல், குத கால்வாய், மலக்குடல் நரம்புகள் வீக்கம், வலி. இதனோடு இரத்தபோக்கு என பல உபாதைகளை உண்டாக்கும்.
இதனால் மலம் வெளியேறும் போது இரத்தமும் வெளியேறுவதால் நீண்ட நாள் இது தொடரும் போது இரத்த சோகை கடுமையாக இருக்கும்.

மூலநோய் என்பது நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உட்புற மூலம் ஆகும். இது குத கால்வாய் பகுதியின் ஆழத்தில் உண்டாவதால் இதை பார்க்க முடியாது. பெரும்பாலும் இவை தானாகவே மறைந்துவிடக்கூடும். இது மலம் கழிக்கும் போது எரிச்சலை உண்டாக்கலாம். இரட்தக்கசிவு ஏற்படலாம். வலி அசெளகரியம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

பைல்ஸ் என்னும் மூல நோயைப் பற்றி பேச பெரும்பாலான மக்கள் வெட்கப்படுவார்கள். ஆனால் பைல்ஸ் பிரச்சனையைப் புறக்கணித்தால், அது தாங்க முடியாத வலியை உண்டாக்கி, வெடித்து நிலைமையையே மோசமாக்கிவிடும். ஆனால் ஓர் நற்செய்தி என்னவெனில், பைல்ஸ் பிரச்சனையை இயற்கையாகவே வீட்டிலேயே சரிசெய்யலாம். அதுவும் ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் தடுத்திடலாம்.

மூணு தலைமுறையா  இருக்கிற மூல நோயை கூட மூணே நாளில் விரட்டும் இந்த இலை

மூல நோய் தீர்க்கும் துத்தி இலை

முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள் மூலநோய்க்கு ஆளாகுறாங்க. இந்த துத்தி இலை மூல நோய்க்கு சிறந்த மருந்தா இருக்கு. ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலைய வதக்கி, மூலத்தால வர்ற கட்டி-புண்ணுக மேல ஒத்தடமிட்டு வந்தா, மூலநோய்க்கு நல்ல குணம் கிடைக்கும்.

பல் ஈறு பிரச்சனை தீர:

பல் ஈறு பிரச்சனையால் அவதிப்படும்  நபர்  துத்தி இலைக் குடிநீரை வாயிலிட்டு கொப்பளிக்கலாம்  ,

உடல் வலி, மலச்சிக்கல் தீர:

கொதிக்குற நீரில் துத்தி இலையப் போட்டு வேகவச்சு, அந்த தண்ணிய ஒரு துணியில நனைச்சுப் பிழிஞ்சு, உடல் வலிக்கு ஒத்தடமிட்டா உடல் வலி தீரும். இலைய கசாயம் செஞ்சு அதோட, பாலும் சக்கரையும் சேத்து குடிச்சு வந்தா, மலச் சிக்கல் தீரும். அதோடு மூலச்சூடும் தணியும்! அப்புறம்… இந்த துத்தி இலைய பருப்பு சேத்து சாப்பாட்டுல கலந்து சாப்பிடலாம். நம்ம முன்னோர்களெல்லாம் இந்த துத்திய உணவாதான் பாத்தாங்க, நாமதான் மருந்தா பாக்குறோம். துத்தி விதையில கூட நல்ல மருத்துவ குணங்கள் இருக்கு.

துத்தி விதையின் பயன்கள்:

அதிக உடல் சூட்டுப் பிரச்சனையைப் போக்க  , துத்தி விதைப் பொடியில் , கொஞ்சம்  சர்க்கரை சேர்த்து 1/2 கிராம் வீதம் தினமும் உண்டு வரலாம்

துத்தி விதைய கரிநெருப்புல போட்டு, அதிலயிருந்து வர்ற புகைய குழந்தைகளின் மலவாயில் படும்படி செய்தா, வயித்துப் புழுக்கள் வெளியேறும். துத்தி விதைக் கசாயத்த தினமும் (15-30 மிலி) குடிச்சு வந்தா பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், மூல நோய் குணமாகும்.