மிரட்டும் கொரோனா மூன்றாவது அலையை விரட்டும் இந்த முரட்டு மூலிகைகள்.

 

மிரட்டும் கொரோனா மூன்றாவது அலையை விரட்டும் இந்த முரட்டு மூலிகைகள்.

கொரோனா நோய்த்தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம். பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை

அவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிசன் உதவி தேவைப்படுகிறது. ஆனால், மிரட்டும் மூன்றாவது அலை நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின் சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

மிரட்டும் கொரோனா மூன்றாவது அலையை விரட்டும் இந்த முரட்டு மூலிகைகள்.

தினமும் மூன்று சின்னவெங்காயத்தை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி  பல மடங்கு அதிகரிக்கும்.  இதில் உள்ள பொட்டாசியம்  உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

இதனால் மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். சின்ன வெங்காயம் கொழுப்பை உடனே கரைக்கும் தன்மை கொண்டது .மேலும் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது. இழந்த சக்தியை மீட்கும் தன்மை உடையது.

எலுமிச்சை பழம்:

பொதுவாக சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் தொற்றிலிருந்து உடலை பாதுகாக்கும்.

அத்துடன் காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்பிலிருந்து காக்கும். மேலும் விட்டமின் c யை இயற்கையாக உற்பத்தி செய்ய மற்றும் சேமிக்க முடியாது என்பதால் தொடர்ந்து ஆரோக்கியத்திற்கு விட்டமின் சி தேவைப்படுகிறது. அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய சிட்ரஸ் பழமான எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.

தாவரங்களிலே  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருள் என்றால், அது கருஞ்சீரகம் தான். இந்த கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினோன்  என்ற வேதிப்பொருள் தான் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மேலும் இதில் முக்கிய அமினோ அமிலங்கள்,அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கால் டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முக்கியமாக இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இந்த கருஞ்சீரகம் உள்ளது.தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

இதில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பாற்றலை தரக்கூடியது. அதாவது தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதற்கு சமம்.  மேலும் இது நரைமுடி ஏற்படாமல் தடுக்கும். மூளைத் திறனை அதிகரிக்கும். பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்று ஏற்படாமல் தடுக்கக் கூடியது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு சில உணவுகள்

பொதுவாக மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதச்சத்து மிகவும் அவசியம்.  மேலும் மஞ்சள் கரு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்ல முட்டைகளில் அதிக அளவு விட்டமின் டி உள்ளதால் எலும்புகளின் வலிமைக்கு மட்டுமல்லாது  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

மீன்களில் உள்ளது போன்றே முட்டையிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதனால் தினமும் முட்டை சாப்பிடுவது கண்பார்வைக்கு, மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மீன் பிடிக்காதவர்கள் கூட முட்டை சாப்பிடுவதன் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நன்மை உடலுக்கு கிடைத்துவிடும்.