கம்ப்யூட்டர்வாசிகளே !உங்க கண்ணை கவனிக்கலேன்னா எதிர்காலத்துல என்னாகும் தெரியுமா ?

 

கம்ப்யூட்டர்வாசிகளே !உங்க கண்ணை கவனிக்கலேன்னா எதிர்காலத்துல என்னாகும் தெரியுமா ?


நீண்ட நேரமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த முழு நேர பளு சுமையே கண்களை பாதிக்கும் முக்கிய காரணி. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் திரைக்கு மிக அருகில் உட்கார்ந்திருத்தல், ஜன்னலில் இருந்து திரையின் மீது படும் கண் கூசும் ஒளிவீச்சு, திரையின் மீதுள்ள தெளிவற்ற எழுத்துக்கள், திரையில் இருந்து உள்ள வசதியற்ற பார்வைக் கோணம், திரையின் மீது நீடித்த மற்றும் மாறாத இமையாத பார்வை போன்றவை இதற்கு காரணமாகின்றன.

கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள்

கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும்.

யாருக்கு பாதிப்பு ஏற்படும்

தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள். கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப் பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.

கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்

கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்கவேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்வாசிகளே !உங்க கண்ணை கவனிக்கலேன்னா எதிர்காலத்துல என்னாகும் தெரியுமா ?

இடைவேளைகளை எடுத்துக் கொள்ளுங்கள் 

நீண்ட நேரம் கண் இமைக்காமல், கம்ப்யூட்டர் திரையை பார்த்துக் கொண்டு வேலை செய்வதால் கண்கள் உலர்ந்து விடும். கண்களில் பணிச்சுமையை மற்றும் ஸ்ட்ரைனை தவிர்ப்பதற்கு, சிறிய இடைவேளைகளை எடுத்து கொள்ள வேண்டும். இது கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களை பாராமரிப்பதற்காக அறிவுறுத்தப்படும் டிப்ஸ் ஆகும்.

உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் வையுங்கள் :உங்கள் உள்ளங்கைகளை நன்கு தேய்த்து, சூடு பரப்புங்கள். பின் உங்கள் உள்ளங்கைகளை கண்களில், 60 நொடிகள் ஒற்றி எடுங்கள். இது களைப்படைந்த உங்கள் கண்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் கண்களுக்கு ஒரு நல்ல அமைதி கிடைக்கும் வரை, இந்த செயலை, இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

கண் பார்வை தூரத்தை சரிசெய்தல்: தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர் பார்க்கும் போது,திரையின் தூரத்தை மற்றும் உங்கள் கண்களின் தொடர்பு தூரத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும்.இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான செயல் ஆகும். இது கம்ப்யூட்டரில் வேலை செய்வோருக்கான முக்கியமான கண் பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.

வெளிச்சத்தின் அளவைக் குறைத்தல் :நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, உங்களுக்கு சரியான அளவில் வெளிச்சத்தை குறைத்து வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும். வெளிச்சத்தைக் கூட்டி வைத்தால் அது கண்களுக்கு, சுமையாக இருக்கும், இது கம்ப்யூட்டரில் நெடுநேரம் வேலை செய்வோருக்கான மற்றொரு கண் பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.

கண்ணாடிகளை பயன்படுத்துங்கள் இந்த கம்ப்யூட்டர் கண்ணாடிகள், கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்யும் நபர்களின் கண்களில் ஏற்படும் ஸ்ட்ரைனை குறைப்பதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. இது எவ்வாறு கண்களின் ஸ்ட்ரைனை குறைக்கும் என சந்தேகமாக உள்ளதா? இந்த கண்ணாடிகள், கண் கூசும் ஒளியை குறைத்து, தெளிவை அதிகப்படுத்தி, உங்கள் கண்களின் ஸ்ட்ரைனை சரிசெய்து உங்கள் கண்களை ரிலாக்ஸ் ஆக்குகிறது.