இதெல்லாம் செய்தால் நார்மல் டெலிவரி நடக்கும்!

 

இதெல்லாம் செய்தால் நார்மல் டெலிவரி நடக்கும்!

பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு போன்றது. கர்ப்பகாலம் பெண்மையின் முக்கியமான காலகட்டம். சிசேரியன் அதிகரித்துள்ள இந்த காலத்தில் சுகப்பிரசவம் என்ன செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறும் பரிந்துரையைக் காண்போம்!

இதெல்லாம் செய்தால் நார்மல் டெலிவரி நடக்கும்!

ஆரோக்கியமான சரிவிகித ஊட்டச்சத்து உணவுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது இயல்பானது. அது கட்டுக்குள் இருக்க வேண்டும். அதிக எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவில் நெய் சேர்த்துக் கொள்வது நலன் தரும். அளவுக்கு அதிகமாக சேர்க்க வேண்டாம்.

அடுத்தது உடற்பயிற்சி. இந்த காலத்தில் ஒன்று, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் கர்ப்ப காலம் என்பது வேலை செய்யக் கூடாத காலமாக மாறிவிட்டது. உடல் உழைப்பு குறைவது பல்வேறு வகையில் பாதிப்புதான். கர்ப்ப காலத்தில் மருத்துவர், உடற்பயிற்சி ஆலோசகர், யோகா நிபுணர் போன்றவர்களின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

போதுமான தூக்கம் மிகவும் முக்கியம். முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். அதன் பிறகு இடது புறம் ஒருக்களித்துப் படுப்பதே நல்லது. இரவில் எட்டு மணி நேரமும் பகலில் ஒரு மணி நேரமும் தூங்க வேண்டும். பகலில் தூங்கும்போது குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் மனக் குழப்பம் ஏற்படும். இதைத் தவிர்க்க புத்தகங்கள் படிக்கலாம். அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் துணை புரியும். நல்ல மெல்லிய பாடல்களை கேட்பது, புத்தகம் படிப்பது, செஸ் போன்றவற்றை விளையாடுவது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். கர்ப்ப காலம் முழுவதும், பிரசவம் வரை ஒரே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இதன் மூலம் கர்ப்பிணியின் முழு உடல் நலம் பற்றிய தகவல் மருத்துவருக்குத் தெரியும். அவர் நார்மல் டெலிவரிக்கு முயற்சி செய்ய அது துணை புரியும்.

அதிக எடை தூக்குவது, ஓடுவது, இடுப்பில் சுமை சுமப்பது போன்ற கடினமான வேலைகளை செய்யக் கூடாது. நாற்காலியில் அமரும் போது பாதங்கள் தரையில் பதிய வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி அமரக் கூடாது. வெஸ்டர்ன் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் சுகப் பிரசவத்திற்காகக் கால்களை மடக்க முடியாமல் அவதியுறுகின்றனர். எனவே, கர்ப்ப காலத்தில் இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவது நல்லது.