பெண்களை வைத்து விபச்சாரம்: டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா கைது

 

பெண்களை வைத்து விபச்சாரம்: டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா கைது

ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 பேர் திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் டிக்டாக் பிரபலம் சூர்யா உட்பட 13 பெண்கள் மீட்கப்பட்டனர்.

திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர்ஸ் என்கிற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்குதொடர் புகார் வந்தது. இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு , அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 5 ஸ்பா சென்டர்களில் தனிப்படை போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினார். இதில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நட்சத்திர விடுதியின் மாடியில் அமைந்துள்ள சன் ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது, அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது உறுதியானது. மேலும், அந்த ஸ்பா சென்டரில், டிக்டாக் பிரபலம் திருப்பூரை சேர்ந்த ரவுடி பேபி சூர்யா உட்பட பல பெண்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக, பிரபல டிக்டாக் சூர்யாவை திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மசாஜ் மையத்தில் உள்ள 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இதுபோன்று விபச்சாரம் நடக்கிறதா என திருச்சியில் உள்ள 5 மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதன்பின் மசாஜ் உரிமையாளர்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் டிக் டாக் சூர்யா உட்பட 18பெண்கள் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லவுள்ளனர்.

திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். ‘ரவுடி பேபி சூர்யா’ என்ற பெயரை தனக்கு தானே வைத்துக்கொண்ட சூர்யா தற்போது யூடியூபில் வீடியோ போட்டுவருகிறார். சமூக வலைதளங்களில் அரைகுறை ஆடையுடன் அலப்பறை கொடுத்துவந்த சூர்யா தற்போது விபச்சாரம் என்ற புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.