டிக்டாக் பிரபலம் ‘உதயா’ சுமதிக்கு 2ஆம் திருமணம்… முன்னின்று நடத்திய அத்தை – குவியும் பாராட்டு!

 

டிக்டாக் பிரபலம் ‘உதயா’ சுமதிக்கு 2ஆம் திருமணம்… முன்னின்று நடத்திய அத்தை – குவியும் பாராட்டு!

டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் தங்களது திறமைகளைக் காட்டி பிரபலமானார்கள். அதில் முக்கியமான காதல் ஜோடி உதயா மற்றும் சுமதி. இவர்கள் இருவருக்கென்று தனியே ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இருவரும் சேர்ந்து செய்யும் டிக்டாக் வீடியோவிற்காக தவமாய் தவமிருப்பார்கள். இவர்களின் காதலுக்கு உதயா வீட்டில் முழு சம்மதமும் இருந்ததால் திருமணம் நடைபெற்றது.

டிக்டாக் பிரபலம் ‘உதயா’ சுமதிக்கு 2ஆம் திருமணம்… முன்னின்று நடத்திய அத்தை – குவியும் பாராட்டு!

இவர்கள் பேமஸாக இருந்த சமயம் டிக்டாக் தடை செய்யப்பட்டது. இருப்பினும் இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டனர். இவர்களுடைய ரசிகர்கள் அங்கு சென்றும் பாலோ செய்தனர். யூடியூப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் பாலோவர்ஸ்களும் இன்ஸ்டாவில் 1 லட்சம் பாலோவர்ஸ்களும் இருந்தனர். இச்சூழலில் இந்தாண்டின் தொடக்கத்தில் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். பலத்த காயமடைந்த உதயா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

டிக்டாக் பிரபலம் ‘உதயா’ சுமதிக்கு 2ஆம் திருமணம்… முன்னின்று நடத்திய அத்தை – குவியும் பாராட்டு!

அதிகமாக செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்லிவிட்டதால் தனது ரசிகர்களிடம் உதவி கோரினார் சுமதி. அவர்களுக்கு உதவிசெய்ய ஏராளமான ரசிகர்கள் முன்வந்தனர். அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட போதிலும் உதயா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி மாதம் பரிதாபமாக உயிரிழந்தார். உதயாவுக்கும் சுமதிக்கும் குழந்தை ஒன்று உள்ளது. இச்சூழலில் கடந்த மூன்று மாதங்களாக தனது அத்தையுடன் (உதயாவின் தாயார்) வாழ்ந்து வந்தார்.

டிக்டாக் பிரபலம் ‘உதயா’ சுமதிக்கு 2ஆம் திருமணம்… முன்னின்று நடத்திய அத்தை – குவியும் பாராட்டு!

இதையடுத்து சுமதிக்கு மறுமணம் செய்துவைக்க அத்தை முடிவுசெய்திருக்கிறார். ஆரம்பத்தில் தயங்கிய சுமதி தனது குழந்தையின் எதிர்காலம் கருதியும் தனக்கும் வாழ்க்கை துணை தேவை என்பதை உணர்ந்து அத்தையின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். குறிப்பாக சுமதியின் பெற்றோர் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் தான் அவரது அத்தை இம்முடிவுக்கு வந்திருக்கிறார்.

டிக்டாக் பிரபலம் ‘உதயா’ சுமதிக்கு 2ஆம் திருமணம்… முன்னின்று நடத்திய அத்தை – குவியும் பாராட்டு!
உதயாவின் தாயாருடன் சுமதி

அதன்படி சுமதிக்கு மறுமணம் செய்து வைத்திருக்கிறார் அத்தை. கைம்பெண்ணாக இருந்த சுமதியின் பெற்றோரை கைவிட்ட நிலையிலும் அத்தை அம்மாவாக முன்னின்று திருமணத்தை நடத்தியது அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது. சுமதிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போல கலாச்சார காவலர்கள் சுமதியையும் அவரது அத்தையையும் திட்டி தீர்க்கின்றனர். அதற்கான விளக்கத்தையும் சுமதியும் அத்தையும் சேர்ந்து வீடியோவில் தெரிவித்திருக்கிறார்கள்.