“இன்ஸ்டாகிராம், யூடியூபில் எங்களை பின்தொடருங்கள்!” – டிக்டாக் கிரியேட்டர்கள் வேண்டுகோள்

 

“இன்ஸ்டாகிராம், யூடியூபில் எங்களை பின்தொடருங்கள்!” – டிக்டாக் கிரியேட்டர்கள் வேண்டுகோள்

டிக்டாக் ஆப் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டிக்டாக்கில் உள்ள கிரியேட்டர்கள் தங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பின்பற்றுமாறு தங்கள் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களுக்கு இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தியா – சீனா இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

“இன்ஸ்டாகிராம், யூடியூபில் எங்களை பின்தொடருங்கள்!” – டிக்டாக் கிரியேட்டர்கள் வேண்டுகோள்

இதையடுத்து இந்தியாவில் டிக்டாக், யூசி பிரவுசர் உட்பட 59 சீன மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிக்டாக் ஆப் நீக்கப்பட்டது. இந்நிலையில், டிக்டாக்கில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை பெற்றிருந்த கிரியேட்டர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகளை பின்தொடருமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.