டெல்லி எல்லையில் பதற்றம்; விவசாயிகளை வெளியேற்ற போலீஸ் தடியடி!

 

டெல்லி எல்லையில் பதற்றம்; விவசாயிகளை வெளியேற்ற போலீஸ் தடியடி!

டெல்லியின் எல்லைப் பகுதிகளிலிருந்து வெளியேறாமல் போராடும் விவசாயிகளின் மீது டெல்லி காவல் துறையினர் தடியடி நடத்திவருவதால் பதற்றம் நிலவிவருகிறது.

டெல்லி எல்லையில் பதற்றம்; விவசாயிகளை வெளியேற்ற போலீஸ் தடியடி!

உத்தரப் பிரதேச-டெல்லி எல்லையின் ஒரு பகுதியான காஸிப்பூரை தொடர்ந்து மற்றொரு எல்லைப் பகுதியான டிக்ரியிலிருந்தும் விவசாயிகளை போராட்டத்தைக் கைவிட்டு வெளியேற டெல்லி காவல் துறையினர் நிர்பந்தப்படுத்துகின்றனர். ஆனால், விவசாயிகள் வெளியேற முடியாது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் காவல் துறையினர் விவசாயிகள் மீது தடியடி நடத்திவருகின்றனர். இருப்பினும், போராட்டத்தைக் கைவிடமால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை ஊர் திரும்ப மாட்டோம் என்று சூளுரைத்துள்ளனர். இதேபோல டெல்லி-ஹரியானா எல்லையான சிங்குவிலிருந்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தும் வேலையில் டெல்லி காவல் துறை இறங்கியுள்ளது. இதனால் டெல்லியின் எல்லைகளில் பதற்றம் நிலவிவருகிறது.