நேரு ஸ்டேடியத்தில் குவிந்த தொண்டர்கள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

 

நேரு ஸ்டேடியத்தில் குவிந்த தொண்டர்கள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். காலை 9 மணிக்கே டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு விட்டார். அவரை வரவேற்க முதல்வர், துணை முதல்வர், பாஜக பிரமுகர்கள் சென்னை விமான நிலையத்தில் தயாராக இருக்கின்றனர். மேள தாளங்களுடன் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நேரு ஸ்டேடியத்தில் குவிந்த தொண்டர்கள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

காலை 10.30 மணிக்கு சென்னை வரும் மோடி, 11 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அங்கு புதிய மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மோடி தொடக்கி வைக்கவிருக்கிறார். மோடியின் வருகையையொட்டி, நேரு அரங்கமே வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன. இந்த விழாவில் அதிமுகவின் கூட்டணி கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

நேரு ஸ்டேடியத்தில் குவிந்த தொண்டர்கள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்த நிலையில், நேரு ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடியை காண அதிமுகவினரும் பாஜகவினரும் அரங்கின் வாயிலில் குவிந்திருக்கும் சூழலில், தடுப்புகள் அமைத்து தொண்டர்களை போலீசார் கட்டுப்படுத்தி வருகிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏதும் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.