டிக்கெட் டூ ஃபினாலே : முதல் போட்டியில் வெற்றி பெற்றது இவர் தான்!

 

டிக்கெட் டூ ஃபினாலே : முதல் போட்டியில் வெற்றி பெற்றது இவர் தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

டிக்கெட் டூ ஃபினாலே : முதல் போட்டியில் வெற்றி பெற்றது இவர் தான்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் 17 ஆம் தேதியுடன் முடிகிறது. அடுத்த வாரம் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளனர். இதுவரை வெற்றியாளர் இவர் தான் என்பதை போட்டியின் மூலம் யாரும் கணக்கிட முடியவில்லை. அந்த அளவிற்கு இந்த சீசன் படுமோசமாகவே உள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து 10 பேர் வெளியேறிய நிலையில் தற்போது ரியோ, கேபி, சோம், ரம்யா, ஷிவானி, பாலா, ஆரி ஆகியோர் போட்டி களத்தில் உள்ளனர்.

டிக்கெட் டூ ஃபினாலே : முதல் போட்டியில் வெற்றி பெற்றது இவர் தான்!

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் அனைத்து போட்டிகளிலும் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறும் நபர் டிக்கெட் டூ பினாலே மூலம் எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட்டு நேரடியாக இறுதி போட்டிக்கு செல்வார் என்று அறிவிப்பு வெளியாகிறது.

அதில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில், தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனை ஹவுஸ்மேட்ஸ் ஒரு கையால் பிடிக்க வேண்டும். இதில் ஷிவானி, கேபி, ஆரி, சோம் ஆகியோரின் பலூன் உடைய, பாலா, ரியோ நிற்பது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.

டிக்கெட் டூ ஃபினாலே : முதல் போட்டியில் வெற்றி பெற்றது இவர் தான்!

முதல் போட்டியில் பாலா வெற்றி பெற்று 7 மதிப்பெண் பெறுகிறார். அதில் இரண்டாவதாக ரியோ 6 மதிப்பெண்கள் பெறுகிறார் என்பது கூடுதல் தகவல்.