குழந்தையை கொடூரமாக தாய் தாக்கிய விவகாரம் ; கம்பி எண்ணும் கள்ளக்காதலன்!

 

குழந்தையை கொடூரமாக தாய் தாக்கிய விவகாரம் ; கம்பி எண்ணும் கள்ளக்காதலன்!

செஞ்சி அருகே 2 வயது குழந்தையை தாய் கொடூரமாக தாக்கியதற்கு முக்கிய காரணமாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி வடிவழகன் – துளசி(23). இவர்களுக்கு கோகுல் மற்றும் பிரதீப்(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இவர்கள் சென்னையில் வசித்து வந்த போது துளசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. செஞ்சிக்கு திரும்பிய பிறகும் துளசியிடம் அடிக்கடி மணிகண்டன் செல்போன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

குழந்தையை கொடூரமாக தாய் தாக்கிய விவகாரம் ; கம்பி எண்ணும் கள்ளக்காதலன்!

அப்போது குழந்தை இடையூறாக இருப்பதால் குழந்தையை அடிக்குமாறு மணிகண்டன் கூறியுள்ளார். குழந்தை பெற்றுக் கொண்டதால் அழகு போய் விட்டதாகவும் இரண்டாவது குழந்தை வடிவழகன் போல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து துளசி சிறுவன் பிரதீப்பை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து மணிகண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குழந்தையை கொடூரமாக தாய் தாக்கிய விவகாரம் ; கம்பி எண்ணும் கள்ளக்காதலன்!

ஒரு கட்டத்தில் வடிவழகுனுக்கும் துளசிக்கும் இடையே தகராறு அதிகமானதால் துளசி ஆந்திராவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரது செல்போனில் பதிவாகியிருந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் துளசியை கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று முன்தினம் சிறையிலடைக்கப்பட்டார். இதையடுத்து புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கும் 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.