கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய மூவர் குண்டர் சட்டத்தில் கைது

 

கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய மூவர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவோர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய மூவர் குண்டர் சட்டத்தில் கைது

இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் கோவில்பட்டி திட்டங்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஊர்காவலன், பசுபதிபாண்டியன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய பரிந்துரை செய்தார். இதனை ஏற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து போலீசார், மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து தூத்துக்குடி சிறையில் அடைத்தனர்.