“சிவனேன்னு நடந்து போன என்னை குனிய சொல்லி …” -ஹிப்னாட்டிசம் பண்ணி என்ன வேலை பண்ணாங்க தெரியுமா?

 

“சிவனேன்னு நடந்து போன என்னை குனிய சொல்லி …” -ஹிப்னாட்டிசம் பண்ணி என்ன வேலை பண்ணாங்க தெரியுமா?


சாலையில் விதியேன்னு நடந்து சென்று கொண்டிருந்தவரிடம் சில நபர்கள் ஹிப்னாட்டிசம் செய்து பணம் நகைகளை கொள்ளையடித்துள்ளார்கள் .

“சிவனேன்னு நடந்து போன என்னை குனிய சொல்லி …” -ஹிப்னாட்டிசம் பண்ணி என்ன வேலை பண்ணாங்க தெரியுமா?


குஜராத் அகமதாபாத் நகரில் காட்லோடியாவில் வசிக்கும் 56 வயதான மனோஜ் பட், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நரோடா செல்லும் வழியில் உள்ள சபர்மதி ஆற்றங்கரைக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது அவரை நெருங்கி ஒரு ஆட்டோ வந்து நின்றது .அதன் பிறகு அந்த ஆட்டோவிலிருந்து மூன்று பேர் இறங்கி வந்தார்கள் .அவர்கள் மனோஜிடம் தாங்கள் சொல்வதை செய்தால் பணம் கொட்டுமென்று கூறினர் .
அதனால் அவர்கள் சொல்வதை நம்பிய அவர் அவர்கள் சொல்வதை கேட்ட்பதாக சொன்னார் .பின்னர் அவர்கள் மனோஜின் உள்ளங்கையில் ஒரு பூ மற்றும் சில மஞ்சள் நிற தூளை வைத்தார்.பின்னர் அவர் அவரின் கால்களைத் தொடும்படி பட்டிடம் கூறினார்.

பிறகு பட் குனிந்து கால்களைத் தொட்டுக் கொண்டிருந்த போது, ​​ மூவரும் ஆட்டோ ரிக்‌ஷாவில் தப்பி ஓடினர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், பட் தன்னிடமிருந்த ரூ .40,000 பணம் மற்றும் தங்க மோதிரங்களை காணவில்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து, அவர் காவல்துறையினரை அணுகி புகார் அளித்தார், அப்போது போலீசில் அவரளித்த புகாரில் மூவரும் அவரை ஹிப்னாடிஸம் செய்து அவரிடமிருந்த பணம் நகைகளை கொள்ளையடித்ததாகக் கூறினார்.போலீசார் வழக்கு பதிந்து அவரிடம் கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர் .

“சிவனேன்னு நடந்து போன என்னை குனிய சொல்லி …” -ஹிப்னாட்டிசம் பண்ணி என்ன வேலை பண்ணாங்க தெரியுமா?