குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

 

குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள காவேரி செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராதா. இவர் தனது மகள் பவ்யா(13) மற்றும் பக்கதுவீட்டில் வசிக்கும் சரஸ்வதி(13) ஆகியோருடன், அருகில் உள்ள சின்ன செங்குளத்திற்கு குளிப்பதற்காக சென்றார்.

இந்த நிலையில், துணிகளை துவைத்துவிட்டு மூவரும் குளத்தில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மவருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். சம்பவம் குறித்து அறிந்த சாணார்பட்டி காவல்நிலைய போலீசார் மருத்துவனைக்கு வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட மூவர் பலியான சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.