திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரேநாளில் 3 பேர் பலி!

 

திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரேநாளில் 3 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரேநாளில் 3 பேர் பலி!

நேற்று மட்டும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 51 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 76,158 ஆக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரேநாளில் 3 பேர் பலி!

இந்நிலையில் திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரேநாளில் 3 பேர் பலியாகியுள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 65 வயது, 63 வயது மூதாட்டி, பண்ணைபட்டியை சேர்ந்த 70 வயது முதியவர் என மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.