இரவில் இருசக்கர வாகனங்களை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

 

இரவில் இருசக்கர வாகனங்களை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

சென்னை போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இரவில் இருசக்கர வாகனங்களை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
இரவில் இருசக்கர வாகனங்களை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

சென்னை போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று போரூர் மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார், அவ்வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய அவர்கள், தீடீரென போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.

இரவில் இருசக்கர வாகனங்களை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

அப்போது,அவர்களை விரட்டிப்பிடித்த போலீசார், போரூர் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் ரபி (26), பரத்குமார்(20) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இரவு நேரங்களில் போரூர் பகுதியில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை திருடுவதும் தெரியவந்தது. இதனையடுத்து மூவர் மீதும் குற்ற வழக்குபதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இரவில் இருசக்கர வாகனங்களை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது