“மண்ணை கொடு பொன்னை தருகிறோம்” -நூதன முறையில் 50 லட்சம் மோசடி

 

“மண்ணை கொடு பொன்னை தருகிறோம்” -நூதன முறையில் 50 லட்சம் மோசடி

ஒருவர் ஒரு நகைக்கடைக்காரரிடம் மணலை கொடுத்து ,தங்கமாகும் என்று ஏமாற்றி 50 லட்சரூபாய் ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது .

“மண்ணை கொடு பொன்னை தருகிறோம்” -நூதன முறையில் 50 லட்சம் மோசடி

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் ஹப்சரில் 39 வயதான ஒருவர் ஒரு நகைகடை வைத்துள்ளார் .அவரின் கடைக்கு கடந்த வருடம் மூன்று பேர் வந்தார்கள் .அவர்கள் அப்போது அந்த கடை உரிமையாளரிடம் நகை வாங்குவது போல நடித்து அவரோடு நட்பு கொண்டார்கள் .பிறகு அவரின் குடுமபத்தினரிடமும் நல்லவர்கள் போல நடித்து நட்பு கொண்டு அவர்களின் வீட்டிற்கு தேவையான மளிகை   பொருட்களை அடிக்கடி இலவசமாக கொடுத்துள்ளார்கள் .

இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் நான்கு கிலோ மணலை கொடுத்து ,இதை மேற்கு வங்கத்திலிருந்து கொண்டு வருவதாகவும் ,இதை சூடாக்கினால் தங்கமாக மாறுமென்றும் கூறினார்கள் .அதை  உண்மையென்று நம்பிய  அந்த நகை கடைக்காரர்  அந்த மணலை வாங்கி கொண்டார் .பின்னர் 30 லட்ச ரூபாய்க்கு அவர்கள் கேட்ட தங்க நகைகளை கொடுத்தார் .அதன் பிறகு அவர்கள் கொடுத்த மணலை சூடாக்கியபோது அந்த மணல் தங்கமாக மாறாததை கண்டு அதிர்ச்சியுற்றார் .அதன் பிறகு கடைக்காரரிடமிருந்து நகைகளை  வாங்கிக்கொண்ட அந்த நபர்கள்  அந்த வீட்டிலிருந்தும் ,அந்த ஊரிலிருந்தும் தலை மறைவாகி விட்டார்கள் .அதன் பிறகு அந்த நபர்களை அந்த கடைக்காரர் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றார் .ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் .

“மண்ணை கொடு பொன்னை தருகிறோம்” -நூதன முறையில் 50 லட்சம் மோசடி