“அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு” : டிடிவி தினகரன் வேண்டுகோள்!

 

“அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு”  : டிடிவி தினகரன் வேண்டுகோள்!

அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

“அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு”  : டிடிவி தினகரன் வேண்டுகோள்!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கிற முழு ஊரடங்கால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை- எளிய மக்கள் பசியால் பாதிக்கப்படாமல் இருக்க அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் கட்டணமின்றி தமிழக அரசு உணவு வழங்கிட வேண்டும்.ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு இன்றும் நாளையும் மட்டுமே இருப்பதால் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிட வேண்டும்.

மேலும் கடந்த முறை போல அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கடைகளில் குவிவதைத் தடுப்பதற்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.கூடுதல் விலையில் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுப்பதற்கு முறையாக கண்காணிப்பினை மேற்கொள்வதும் அவசியமாகும்” என்று தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.