பார்வையற்ற தந்தைக்கு உதவுவதாக கூறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை… மூவர் போக்சோவில் கைது!

 

பார்வையற்ற தந்தைக்கு உதவுவதாக கூறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை… மூவர் போக்சோவில் கைது!

திண்டுக்கல்

கொடைக்கானலில் பார்வையற்ற தந்தைக்கு உதவி செய்வது போல நடித்து, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினர் உள்ளிட்ட 3 பேரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்துகிறார். தாயார் பிரிந்து சென்ற நிலையில், பார்வையற்ற தந்தை இவரை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவியின் உறவினர் கண்ணன் (42) என்பவர், தந்தைக்கு உதவி செய்வதாக கூறி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

பார்வையற்ற தந்தைக்கு உதவுவதாக கூறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை… மூவர் போக்சோவில் கைது!

அப்போது, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதே பாணியில், செண்பகனூர் ஐயர் கிணறை சேர்ந்த குமார் (56), குறிஞ்சி நகரை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோரும் சிறுமியின் தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவதாக கூறி, சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் அளித்த நிலையில், அந்த அமைப்பினர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த கண்ணன், மணிகண்டன், குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.