குலசேகரன்பட்டினத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற மூவர் கைது

 

குலசேகரன்பட்டினத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற மூவர் கைது

தூத்துக்குடி

குலேசகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் மற்றும் உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் ராதிகா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குலசேகரன்பட்டினத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற மூவர் கைது

அப்போது, குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் மதுபாட்டில்களை விற்ற நாராயணன் என்பவரை கைதுசெய்தனர். இதேபோல், உடன்குடி பேருந்து நிலையம் பகுதி மற்றும் வடக்கு பஜார் டாஸ்மாக் கடையின் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட பிரசாந்த் மற்றும் மாரியப்பன் ஆகியோரையும் போலீசார் கைதுசெய்தனர்.

மூவரிடமும் இருந்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 238 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மதுவிற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.