‘அடப்பாவி பேய விரட்டுறேன்னு அவுங்களையே பேயாக்கிட்டியே’ – அடித்து ,உதைத்து தாய், மகன் உயிரை பறித்த மந்திரவாதி ..

 

‘அடப்பாவி பேய விரட்டுறேன்னு அவுங்களையே பேயாக்கிட்டியே’  – அடித்து ,உதைத்து தாய், மகன் உயிரை பறித்த மந்திரவாதி ..

பேய் விரட்டுவதாக கூறி இருவரை மரத்தில் கட்டிவைத்து ,அவர்களின் உயிரை பறித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர் .

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கல்யாண் டவுன்ஷிப்பில் உள்ள அடடே கிராமத்தில் ஒரு 76 வயது தாய்க்கும் அவரின் 50 வயது மகனுக்கும் குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டம் நிலவி வந்துள்ளது .பணக்கஷ்டம் முதல் மன கஷ்டம் வரை தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது .இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அவர்கள் அந்த ஊரிலுள்ள ஒரு மந்திரவாதியிடம் சென்றுள்ளனர் .அவர்களோடு அவர்களின் 17 வயது மகன் மற்றும் சில உறவினர்களும் சென்றுள்ளனர் .
அப்போது அந்த மந்திரவாதி அந்த தாயையும் ,மகனையும் ஒரு மரத்தில் கட்டி வைத்து அவர்கள் உடம்பில் பேய் பிடித்துள்ளதாக கூறி பெரிய கட்டையாலும் .கம்பாலும் அடித்துள்ளார் .அவர் கடுமையாக தாக்கியதில் அவர்களிருவரும் அங்கேயே உயிரிழந்துள்ளனர் .

‘அடப்பாவி பேய விரட்டுறேன்னு அவுங்களையே பேயாக்கிட்டியே’  – அடித்து ,உதைத்து தாய், மகன் உயிரை பறித்த மந்திரவாதி ..
அவர்கள் அங்கு உயிரிழந்த விஷயம் அந்த ஊர் மக்களிடையே காட்டு தீ போல பரவியது .அங்கிருந்த சிலர் இந்த தகவலை போலீசுக்கு கூறியுள்ளனர் .போலீசார் விஷயம் கேள்விப்பட்டு உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த மந்திரவாதியையும் ,மற்றும் இறந்தவர்களின் உறவினர்களையும் கைது செய்தனர் .அவர்களின் 17 வயது மகனையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து , பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

‘அடப்பாவி பேய விரட்டுறேன்னு அவுங்களையே பேயாக்கிட்டியே’  – அடித்து ,உதைத்து தாய், மகன் உயிரை பறித்த மந்திரவாதி ..
Source: Vikatan