CSK தோற்றதால் தோனியின் மகளைப் பற்றி இப்படியா கமெண்ட் செய்வது?

 

CSK தோற்றதால் தோனியின் மகளைப் பற்றி இப்படியா கமெண்ட் செய்வது?

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வின் பண்ணிய கொல்கத்தா முதலில் பேட்டிங் என முடிவெடுத்தது. கொல்கத்தா அணி 167 ரன்களை அடித்தது.

அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் போராடி எடுத்த ரன்களை கேதார் ஜாதவ் நிறைய டாட் பால்களை ஆடி தோல்விக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி அடைந்தது.

CSK தோற்றதால் தோனியின் மகளைப் பற்றி இப்படியா கமெண்ட் செய்வது?

இந்நிலையில் சென்னை தோற்றதால், கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தோனி மகளைப் பற்றி ஆபாசமாக எழுதி கமெண்ட் செய்திருக்கிறான். தோனியின் மகளுக்கு ஐந்து வயதே ஆகிறது. ஆனால், அந்தக் குழந்தையைப் பற்றி பாலியல் ரீதியாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ளான். அதை பொதுவெளியில் பகிரக்கூட முடியாத அளவு கேவலமாக எழுதியிருக்கிறான்.

CSK தோற்றதால் தோனியின் மகளைப் பற்றி இப்படியா கமெண்ட் செய்வது?

அவனின் பதிவுக்கு சோஷியல் மீடியாவில் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். வீரர் ஒருவர் ஒழுங்காக விளையாட விட்டால் அவர் வீட்டுப் பெண்களைப் பற்றி ஆபாசமாகச் சித்திரிப்பது வாடிக்கையாகி விட்டது. இதற்கு கடும் தண்டனை கிடைக்கும்பட்சத்தில் இதுபோல தொடராமல் தடுக்க முடியும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.