தனி மாவட்டம் அமைக்கக் கோரி, கும்பகோணத்தில் ஆயிரக்கணக்கானோர் பேரணி!

 

தனி மாவட்டம் அமைக்கக் கோரி, கும்பகோணத்தில் ஆயிரக்கணக்கானோர் பேரணி!

தஞ்சாவூர்

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி நீண்ட காலமாக கும்பகோணம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய மாவட்டம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் உதயகுமார் உறுதி அளித்திருந்த நிலையிலும், இதுவரை அறிவிப்பு வெளியாக வில்லை.

தனி மாவட்டம் அமைக்கக் கோரி, கும்பகோணத்தில் ஆயிரக்கணக்கானோர் பேரணி!

இந்த நிலையில், தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி, இன்று கும்பகோணத்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் முன்பு அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக புறப்பட்டு உச்சிப்பிள்ளையார் கோவில் சென்றடைந்தனர்.

தொடர்ந்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய மாவட்டம் அமைக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்தனர். மேலும், கோரிக்கைளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை சென்னையில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.