விடுதலை செய்யப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடரக் கூடாது!

 

விடுதலை செய்யப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடரக் கூடாது!

சென்னையைச் சேர்ந்த வில்சன் சுந்தர்ராஜ் என்பவருக்கு எதிராக எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, பின் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. அந்தஸ்தில் இருந்த ராதிகா, வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், வில்சன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

விடுதலை செய்யப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடரக் கூடாது!

இந்நிலையில் புகார்தாரர் ராஜாமணியுடன் சேர்ந்து விசாரணை அதிகாரியான டிஎஸ்பி ராதிகா தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி சென்னையிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வில்சன் சுந்தர்ராஜ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிசிஐடி அதிகாரியான ராதிகாவை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்தச் சம்மனை ரத்து செய்யக்கோரி ராதிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடரக் கூடாது!

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் விடுதலை ஆகும்போது, தனக்கு எதிராகப் பொய் வழக்கு பதிவு செய்ததாக குற்றம் சாட்ட முடியாது என்றார். ராதிகாவுக்கு எதிரான சம்மனையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இதேபோல, வழக்குகளில் விடுதலை செய்யப்படுபவர்கள், விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிப்பது என்பது விசாரணை அமைப்பின் சுதந்திரத்தில் தலையிடுவது போல் ஆகிவிடும் என்றும் நீதிபதி கூறினார்.