பதவியை எதிர்பார்த்து திமுகவுக்கு வரவில்லை – தோப்பு வெங்கடாசலம் அதிரடி!

 

பதவியை எதிர்பார்த்து திமுகவுக்கு வரவில்லை – தோப்பு வெங்கடாசலம் அதிரடி!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் பதவியை எதிர்பார்த்து கட்சியில் இணையவில்லை என்று கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தோப்பு வெங்கடாசலம், திமுகவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அற்புதமாக வழி நடத்திச் செல்கிறார். நேர் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் அவருடைய பாங்கு எங்களை ஈர்த்தது. பதவியேற்றதும் பெண்களுக்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதை அரசியல் ஆர்வலர்கள் உற்று நோக்குகிறார்கள். மக்களின் குறைகளைத் தீர்க்கும் நிரந்தர முதல்வராக முதல்வர் மு.க ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். உலக தமிழர்களுடைய ஒப்பற்ற தலைவராக கலைஞரின் வாரிசாக ஸ்டாலின் அவர்கள் சமூக நீதியுடன் செயல்படுகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

பதவியை எதிர்பார்த்து திமுகவுக்கு வரவில்லை – தோப்பு வெங்கடாசலம் அதிரடி!

தொடர்ந்து பேசிய அவர், எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழி வாங்கக் கூடிய மனப்பான்மை இருக்கும். ஆனால் ஸ்டாலின் எந்த திட்டங்களை செயல்படுத்தும் போதும் அனைத்து கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகளிடம் வேறுபாடு இல்லாமல் ஆலோசனை பெறுகிறார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அசைக்க முடியாத எஃகு கோட்டை என்றார். மேலும், பதவியை எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை. அவருடைய பார்வை ஒன்றே போதும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.