‘இதுவரை இல்லாத அளவில்’.. தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி!

 

‘இதுவரை இல்லாத அளவில்’.. தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருப்பினும் சென்னையில் 70க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாகவும் 15 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இதுவரை இல்லாத அளவில்’.. தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி!

இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பு நடவடிக்கயை முடுக்கி விட்டுள்ளன. குறிப்பாக நெல்லை, விருதுநகர்,தேனி, தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக அதிகரித்துள்ளது.