கொலை முயற்சி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

 

கொலை முயற்சி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை, போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுபாஷ் நகரை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவரை கடந்த 5ஆம் தேதி, அதே பகுதியை
சேர்ந்த மற்றொரு நபரை பீர்பாட்டிலால் குத்தி கொலைசெய்ய முயன்ற

கொலை முயற்சி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதேபோல், கயத்தாறு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் கீழவளவை சேர்ந்த அய்யனார்(30) மற்றும் சூர்யா(20) ஆகியோரை கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி போலீசார் கைது

கொலை முயற்சி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.