வாக்குகேட்டு வந்த அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜுவை முற்றுகையிட்ட பெண்கள்

 

வாக்குகேட்டு வந்த அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜுவை முற்றுகையிட்ட பெண்கள்

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இறுதி கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென திமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன.

வாக்குகேட்டு வந்த அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜுவை முற்றுகையிட்ட பெண்கள்

இந்நிலையில் தூத்துக்குடி கோவில்பட்டி தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூவை முற்றுகையிட்ட பெண்கள் ஏராளமான கேள்விகளை கேட்டனர். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து சாலையை பாருங்கள், சாலை வசதி கூட இல்லை. பிறகு எதற்கு ஓட்டு கேட்டு வருகிறீர்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறினார். இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, ஒன்றிய கவுன்சிலர் ராமர் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.