`சாத்தான்குளம் சம்பவம் அரசப்பயங்கரவாதம்!’-தொல்.திருமாவளவன்

 

`சாத்தான்குளம் சம்பவம் அரசப்பயங்கரவாதம்!’-தொல்.திருமாவளவன்

“தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திய சாத்தான்குளம் சம்பவம் அரசப்பயங்கரவாதம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் ட்விட்டரில் #JusticeforJayarajAndFenix என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

`சாத்தான்குளம் சம்பவம் அரசப்பயங்கரவாதம்!’-தொல்.திருமாவளவன்

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தமிழகத்திற்கு- இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திய சாத்தான்குளம் அரசப்பயங்கரவாதம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த கொடூரமென சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், இது போன்ற சம்பவம் எங்கே நடந்திருந்தாலும் இது காவல் துறையின் அருவருப்பான அரசவன் கொடுமை என குறிப்பிட்டுள்ளார்.