இதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது; ராகுலுக்கு வந்த சிக்கல்

 

இதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது; ராகுலுக்கு வந்த சிக்கல்

டெல்லியில் பாதிரியார் மற்றும் சுடுகாட்டில் தகனம் செய்பவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோர் நீதி கேட்டு டெல்லியில் போராடுகின்றனர். மக்களும் அவர்களுடன் கைகோர்த்து போராடுகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல்காந்தி, நீதி கேட்கும் போராட்டத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது; ராகுலுக்கு வந்த சிக்கல்

பெற்றோர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டும், அதற்கு நான் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அந்த பெற்றோரின் கண்ணீர் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறது. பட்டியலின மகளும் நாட்டின் மகள்தான் என்று விசயம் எனக்கு புரிகிறது. நீதி கேட்டு செல்லும் பாதையில் நான் அவர்களுடன் இருக்கிறேன் என்று டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார் ராகுல். அதில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லும் புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தார் ராகுல்.

இதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது; ராகுலுக்கு வந்த சிக்கல்

இதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறது.

அந்த கடிதத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தினை (முகத்தை மறைக்காமல்) வெளியிட்டிருப்பது, சிறார் நீதி சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றை மீறிய செயல். இதன் மூலமாக அச்சிறுமியின் அடையாளத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். அதனால், டுவிட்டர் பக்கம் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பதிவினை நீக்க வேண்டும். நீக்கப்பட்ட பின்னர் அதுகுறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டெல்லியில் அந்த 9 வயது சிறுமிக்கு என்ன நடந்தது?

டெல்லியில் காண்ட் பகுதியை அடுத்த பழைய நங்கல் கிராமத்தில் எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி, கடந்த ஞாயிற்று கிழமை மாலை 5 மணி அளவில் சுடுகாட்டு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் எடுக்க சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடிச்சென்றுள்ளனர். இரவு 7.30 மணிக்கு சுடுகாட்டில் சென்று தாய் தேடியபோது, அங்கிருந்த பாதிரியார் ராதே ஸ்யாம்(45) மற்றும் தகன மேடை ஊழியர்கள் லட்சுமி நாராயணன், சலீம், குல்தீப் ஆகியோர், உங்க மகள் தண்ணீர் பிடிக்க வந்தார். தண்ணீர் தொட்டியில் இருந்த மின் வயரை தொட்டதால் அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார் என்று சொல்லி இருக்கின்றனர்.

இதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது; ராகுலுக்கு வந்த சிக்கல்

மகளின் உடலை காட்டியதும் தாய் கட்டியணைத்து கதறினார். உடனே பெற்றோர் மற்றும் உறவினர்களிடம், போலீசுக்கு போனால் பிரேத பரிசோதனை செய்வார்கள். உங்கள் மகள் வெட்டி உடல் உறுப்புகளை திருடிவிடுவார்கள். அதனால் சுடுகாட்டிலேயே எரித்து விடுங்கள் என்று சொல்லவும், உறவினர்களும் அதன்படியே செய்துள்ளனர்.

ஆனால் வீட்டிக்கு திரும்பிய சிறுமியின் தாயாருக்கு மட்டும் சந்தேகம் இருந்துள்ளது. மகளின் மணிக்கட்டின் இருந்த காயமும், உதடுகள் நீல நிறமாக இருந்ததும் சந்தேகம் கொடுத்தது. இதை எல்லோரிடமும் சொல்ல, அவர்கள் போலீசுக்கு சொல்ல, போலீஸ் வந்தபோது அதற்கு சிறுமியின் உடல் பாதி எரிந்துவிட்டது. ந்ஓடிப்போயி தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு, எரியாமல் இருந்த பாகங்களை சேகரித்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.

இதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது; ராகுலுக்கு வந்த சிக்கல்

போலீசார் பாதிரியாரிடம் விசாரித்ததில் அவரும் சுடுகாட்டில் வேலை செய்த 3 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியின் கொலைக்கு நியாயம் கேட்டு, JusticeForDelhiCanttGirl என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர் மக்கள். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி இருக்கிறது. ராகுல்காந்தியும் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, நீதி கிடைக்க உதவியாய் இருப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.