“திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து இதற்கு தான்” : மு.க.ஸ்டாலின் உறுதி!

 

“திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து இதற்கு தான்” : மு.க.ஸ்டாலின் உறுதி!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள் .இன்னும் 4 மாதங்களில் வழிபிறக்கும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து இதற்கு தான்” : மு.க.ஸ்டாலின் உறுதி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவடி பகுதியில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். அப்போது பேசிய அவர், “பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல ;உங்கள் வாழ்த்துக்களை பெறவே நான் இங்கு வந்து இருக்கிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள் .இன்னும் 4 மாதங்களில் வழிபிறக்கும். பிறந்தே தீரும், அதனால் தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம் . ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அண்ணாவின் வழி . அவர் வழியில் நாம் நடப்போம். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். அவர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட போது அதிமுகவினர் கேலி செய்தனர்.ஆனால் அவர்களே அதிகம் பயன்பெற்றனர். கலைஞர் அனைவரையும் விவசாய பெருங்குடி மக்களாக தான் பார்த்தார். அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தால் எனது முதல் கையெழுத்து விவசாய கடனை தள்ளுபடி செய்வது தான். உழவர்களுக்கான திருநாளில் உழவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். இன்னும் நான்கு மாதத்தில் அது நடக்கும்; பொறுத்திருங்கள்” என்று கூறினார்.

“திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து இதற்கு தான்” : மு.க.ஸ்டாலின் உறுதி!

இதேபோல் கடந்த 13 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். அதேபோல் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.