திருவாரூர்: தாசில்தார் – 6 வி.ஏ.ஓ-க்களுக்கு கொரோனா!

 

திருவாரூர்: தாசில்தார் – 6 வி.ஏ.ஓ-க்களுக்கு கொரோனா!

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு தாசில்தார் உள்ளிட்ட ஏழு வருவாய்த் துறை ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்: தாசில்தார் – 6 வி.ஏ.ஓ-க்களுக்கு கொரோனா!
தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனாத் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் புதிதாக கொரோனா நோயாளிகள் கண்டறிதல் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

திருவாரூர்: தாசில்தார் – 6 வி.ஏ.ஓ-க்களுக்கு கொரோனா!இந்த நிலையில் மன்னார்குடியை அடுத்த கூத்தாநல்லூரில் வசிக்கும் வட்டாட்சியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் நேற்று அந்த மாவட்டத்தில் மட்டும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா உறுதியானதன் மூலம் மேலும் இது பலருக்கும் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விரைவாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.