தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் திருவண்ணாமலை ஆட்சியர் ஆலோசனை!

 

தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் திருவண்ணாமலை ஆட்சியர் ஆலோசனை!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ள தேர்தல் செலவின பார்வையாளர்களுடன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, 2 தொகுதிகளுக்கு ஒரு செலவின பார்வையாளர் என்ற முறையில் மகேஷ்‌சந்த்‌ பரத்வாஜ்‌, குமார்‌ சிங்‌, துர்கேஷ்‌ குமார்‌ சுக்லா மற்றும் ராகுல் ‌மகாடோ ஆகியோர்‌ நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் திருவண்ணாமலை ஆட்சியர் ஆலோசனை!

இந்த நிலையில், திருவண்ணாமாலை வந்தடைந்த செலவின பார்வையாளர்களுடன், நேற்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தின் போது, மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி., அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.