இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெண் கைது

 

இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெண் கைது

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே புதுப்பட்டு கிராமத்தில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி சத்யதேவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி மப்பேடு அருகே சுங்குவார்சத்திரம் சாலையில் நாகராஜை 4 பேர் கொண்ட
கும்பல் வெட்டிக் கொன்றது. இதுகுறித்து திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெண் கைது

அதில், புதுப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சத்யதேவி என்ற பெண்ணை நாகராஜ் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கணவர் ராஜாவிடம் சத்யதேவி தெரிவித்த நிலையில், அவரது தூண்டுதலின் பேரில் கணவர் ராஜா மற்றும் 4 நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.. கொலைக்கு உடந்தையாக இருந்த சத்யதேவியை கைதுசெய்த போலீசார், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.