கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில், இளைஞர் உயிரிழப்பு

 

கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில், இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது நெஞ்சில் பந்துபட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்(24). இவர் அதேபகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் பந்து பட்டத்தில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில், இளைஞர் உயிரிழப்பு

தகவலின் பேரில் மருத்துவமனைக்கு சென்ற புல்லரம்பாக்கம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, லோகநாதனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டடது. உடலை நாளை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.