“ரஜினி கூறியது போல், ஆட்சிமாற்றம் நிச்சயம் நடக்காது” – கே.பி.முனுசாமி

 

“ரஜினி கூறியது போல், ஆட்சிமாற்றம் நிச்சயம் நடக்காது” – கே.பி.முனுசாமி

திருவள்ளூர்

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படபோவதாக தெரிவித்து இருப்பது நிச்சயம் நடக்காது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளூவர் மாவட்டம் மணவாள நகரில், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு, சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

“ரஜினி கூறியது போல், ஆட்சிமாற்றம் நிச்சயம் நடக்காது” – கே.பி.முனுசாமி

இந்த கூட்டத்தில் பேசிய அவர், ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை அமைக்கப் போவதாகவும், ஆன்மீக அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்த ரஜினிகாந்த், ஆட்சி மாற்றம் செய்யப்போவதாக கூறியுள்ளது நிச்சயம் முடியாது என்று தெரிவித்தார். மேலும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இந்த பேரியக்கத்தை, யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது நிச்சயம் முடியாது என்றும் கே.பி.முனுசாமி ஆவேசமாக பேசினார்.