திருவள்ளூரில் மேலும் 655 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 15,751 ஆக உயர்வு!

 

திருவள்ளூரில் மேலும் 655 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 15,751 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருவள்ளூரில் மேலும் 655 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 15,751 ஆக உயர்வு!

இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 655 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 15,751 ஆக அதிகரித்துள்ளது.