கொசஸ்தலை ஆறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

 

கொசஸ்தலை ஆறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் நீர்த் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி திறக்கப்பட உள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி நீர்தேக்கத்தில் இருந்து இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை வரை வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளாத தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொசஸ்தலை ஆறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

மழை தொடரும் பட்சத்தில் நீர்திறப்பின் அளவை உயர்த்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் நகரி ஆற்றின் வழியாக பூண்டி அணை வந்தடையும் என எதிர்பார்க்கப் படுவதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். மேலும், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்