கிணற்றில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர்- கொலையா? என போலீசார் விசாரணை

 

கிணற்றில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர்- கொலையா? என போலீசார் விசாரணை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் முத்து(33). ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வேதவல்லி(30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே முத்துவிற்கு மதுஅருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் அதே பகுதியில் கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில், முத்து நேற்று இரவு வீட்டிற்கு திரும்பாததால் அச்சமடைந்த அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

கிணற்றில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர்- கொலையா? என போலீசார் விசாரணை

அப்போது அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், உறவினர்கள் சென்று பார்த்தபோது முத்து கிணற்றில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.