புல்லூர் தடுப்பணையில் வாணியம்பாடி வட்டாட்சியர் ஆய்வு

 

புல்லூர் தடுப்பணையில் வாணியம்பாடி வட்டாட்சியர் ஆய்வு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பியுள்ளது. இதனையடுத்து, புல்லூர் தடுப்பணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வர துவங்கியுள்ளது. இதனை வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, பாலாற்றில் தண்ணீர் வரக்கூடிய திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், அம்பலூர், கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.