அனுமதி இன்றி கிராம சபை கூட்டம்- திமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

 

அனுமதி இன்றி கிராம சபை கூட்டம்- திமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில், கிராம சபை கூட்டம் நடத்தியத்து தொடர்பாக ,திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு மற்றும் கொத்த கோட்டை பகுதியில் கிராம சபா கூட்டம் நடத்துவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனுமதி இன்றி கிராம சபை கூட்டம்- திமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

கிராம சபை கூட்டம் நடத்துவதை அரசு நிறுத்தி வைத்த நிலையில், அனுமதி இன்றி நடத்தியதாக, திருப்பத்தூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவல் மற்றும் 144 தடை உத்தரவு மீறி கூட்டம் சேர்க்கப்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்