கஞ்சா பதுக்கல்; நடவடிக்கை எடுக்காத திருமயம் எஸ்.ஐ சஸ்பெண்ட்!

 

கஞ்சா பதுக்கல்; நடவடிக்கை எடுக்காத திருமயம் எஸ்.ஐ சஸ்பெண்ட்!

திருமயம் எஸ்.பி ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஸ்டாலின். அப்பகுதியில் கஞ்சா கடத்தல் மற்றும் பதுக்கல் அதிகரித்துக் கொண்டே வந்ததால், எஸ்.ஐ ஸ்டாலினிடம் புகார்கள் குவிந்துள்ளன. இருப்பினும், கஞ்சா பதுக்கல் விவகாரத்தில் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மாறாக, கஞ்சா பதுக்கலில் ஈடுபட்டவர்களுக்கு எஸ்.ஐ ஸ்டாலின் உதவி செய்ததாக கூறப்படுகிறது.

கஞ்சா பதுக்கல்; நடவடிக்கை எடுக்காத திருமயம் எஸ்.ஐ சஸ்பெண்ட்!

இந்த விவகாரம் புதுக்கோட்டை எஸ்.பியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதன் படி ஸ்டாலின் மீதான புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட எஸ்.பி, திருமயம் காவல் எல்லை பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் விவகாரத்தில் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதனிடிப்படையில், திருமயம் எஸ்.ஐ ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.