புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்த திருமாவளவன்: காரணம் இது தான்!

 

புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்த திருமாவளவன்: காரணம் இது தான்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்த விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்துக் கூறினார்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அசத்தல் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. புதுச்சேரி முதல்வரின் இந்த அறிவிப்பு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்த திருமாவளவன், அவரிடம் வாழ்த்துக்கள் கூறினார்.

புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்த திருமாவளவன்: காரணம் இது தான்!

சுமார் 30 நிமிட சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பழங்குடியின மாணவர்களுக்கும் பழங்குடியின மாணவர்களுக்கும் இலவச படிப்பு என அறிவித்த முதல்வருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன் என்றும் இந்த திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியிலும் தமிழகத்திலும் சனாதன சக்திகளை கால் ஊன்ற விடாமல் தடுப்போம் என்றும் இந்த புத்தாண்டில் அது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.