“ஸ்டேன் சாமி மறைவு- சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

 

“ஸ்டேன் சாமி மறைவு- சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

திருச்சியை சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சாமி, ஜார்கண்ட் மாநில பழங்குடி இன மக்களுக்காக பாடுபட்டுவந்தார். கடந்த 2018ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கர் பரிஷத் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

“ஸ்டேன் சாமி மறைவு- சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், எல்கர் பரிஷத் வழக்கில் தலேஜா சிறையில் அடைபட்டிருந்தார். பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன் சாமிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மனித உரிமைகள் ஆணையமும், ஐநா முக்கிய பிரமுகரும் அறிவுறுத்தி இருந்த நிலையில் அவர் சிறையிலேயே காலமாகிவிட்டார்.

இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான்சாமி உயிரிழந்தார். பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் பயங்கரவாதத்தை’ வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறினார்.