அரசுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது… எழுவரை விடுதலை செய்யுங்கள் – திருமாவளவன் கோரிக்கை!

 

அரசுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது… எழுவரை விடுதலை செய்யுங்கள் – திருமாவளவன் கோரிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும் என்றும் அவரிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவாளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது… எழுவரை விடுதலை செய்யுங்கள் – திருமாவளவன் கோரிக்கை!

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் காட்டும் அக்கறையை பாராட்டுகிறோம். ஆனால் அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும். அதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என வேண்டுகிறோம்.

அரசுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது… எழுவரை விடுதலை செய்யுங்கள் – திருமாவளவன் கோரிக்கை!

கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப் பட்டது. அதை சுமார் இரண்டு ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் சிபிஐ விசாரணை முடிவடையாததை காரணமாக கூறினார். ஆனால் அந்த விசாரணைக்கும் 7 பேர் விடுதலைக்கு எந்த தொடர்பும் இல்லை என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகும் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தி வந்த ஆளுநர் கடைசியில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும், அவருக்கு அனுப்பி விட்டேன் என்று கூறிவிட்டார். அப்படி அவர் அனுப்பி இருந்தால் அது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். மாநில அரசின் அதிகாரத்தை மீறியதாகும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161 தண்டனை குறைப்பு செய்ய மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது என கூறுகிறது. அது பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தாலும் அதில் மாநில அரசின் அதிகாரத்தை பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக் கொடுத்து பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப் போகிறது. அந்த தவறை சரி செய்ய வேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது. எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும் வரை அவர்கள் ஏழு பேரையும் பரோலில் விடுதலை செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.