பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

 

பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

திருமாவளவன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் சர்ச்சை அளிக்கும் விதத்தில் பேசியதாக கூறப்பட்டது . இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கட்சிகளின் சார்பில் திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

இதையடுத்து மனுதர்மத்தை தடை செய்யக்கோரி திருமாவளவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்றன. அப்போது பேசிய அவர், எனது 40 நிமிட உரை முழுமையாக பெண்கள் கேட்க வேண்டும் என்றும் பெண்களை இழிவுபடுத்தினோம் என்று அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பழிபோடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் மனுதர்மம் குறித்து தனது கருத்தை திரித்து அவதூறு பரப்புவதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் திருமாவளவன் போராட்டம் நடத்தி வருகிறார். இதில் சுமார் 200ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பாஜகவுக்கு எதிராக விசிகவினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.