“பெயருக்கேற்றார் போல் விவேகமானவர்… பழகுதற்கு இனியவர்” – திருமாவளவன் உருக்கம்!

 

“பெயருக்கேற்றார் போல் விவேகமானவர்… பழகுதற்கு இனியவர்” – திருமாவளவன் உருக்கம்!

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் விருகம்பாக்கத்திலுள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஏராளமான திரைப் பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

“பெயருக்கேற்றார் போல் விவேகமானவர்… பழகுதற்கு இனியவர்” – திருமாவளவன் உருக்கம்!

தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தமிழ் திரையுலகில் நடிகர் விவேக்கின் பங்களிப்பு மிகப் பெரியது. பெயருக்கேற்பார் போல விவேகமானவர். அனைவருடனும் நல்லிணக்கத்துடன் பழகக் கூடியவர். சமூக அக்கறை கொண்டவர். அவரின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்குப் பேரிழப்பு. அவரின் இழப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது. அதைச் சகித்துக் கொள்ள மனம் மறுக்கிறது.

“பெயருக்கேற்றார் போல் விவேகமானவர்… பழகுதற்கு இனியவர்” – திருமாவளவன் உருக்கம்!

நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றே விழிப்புணர்வு செய்தார். இதிலிருந்தே அவரின் சமூக அக்கறையை நாம் புரிந்துகொள்ளலாம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைக் கூறிக் கொள்கிறேன். அவரது மறைந்தாலும் இப்பூவுலகில் சுற்றுச்சூழலை நாம் அனைவரும் பாதுகாப்போம் என உறுதியேற்போம்” என்றார்.