“கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது”: திருமாவின் கணிப்பு

 

“கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது”: திருமாவின் கணிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் சுயேச்சை சின்னத்தில் விசிக போட்டியிடும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது”: திருமாவின் கணிப்பு

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி உடன்பாட்டுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடும். எந்த சின்னம் கிடைக்கிறதோ அந்த சின்னத்தில் 6 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். 6 தொகுதிகளில் எத்தனை தனி தொகுதி, எத்தனை பொது தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் .தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என பாஜக நினைக்கிறது. அதனால் தமிழக தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்ற கொள்கைக்காக குறைவான தொகுதிகளில் ஏற்க முடிவெடுத்துள்ளோம் என்றார்.

“கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது”: திருமாவின் கணிப்பு

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தின் நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். வாக்குகள் சிதறினால் பாஜகவின் திட்டம் வென்றுவிடும். கூட்டணியை உடைப்பதில் பாஜக கைதேர்ந்தது ” என்றார்