பாமக சாதிவெறி.. இருவர் கொலை : திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

பாமக சாதிவெறி.. இருவர் கொலை : திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் அர்ஜுனன்(23), சூர்யா(21). இவர்கள் இருவரும் நேற்று மதன் மற்றும் வல்லரசு ஆகியோருடன் சேர்ந்து குருவராஜப்பேட்டையில் உள்ள கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

பாமக சாதிவெறி.. இருவர் கொலை : திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிறிது நேரத்தில் அர்ஜுனன் மற்றும் அவரது நண்பர்களை கத்தி, இரும்பு கம்பி மற்றும் பாறாங்கல் ஆகியவற்றை கொண்டு அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அர்ஜுனனும் சூர்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த அவரது நண்பர்கள் 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேர்தல் தொடர்பாக அவர்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் கொலை செய்தவர்கள் பாமகவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

பாமக சாதிவெறி.. இருவர் கொலை : திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்!

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரக்கோணம் அருகே சோகனூரில் இருவர் படுகொலை. மேலும், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. தோல்வி பயத்தில் சாதி-மதவெறி கும்பலின் கொடூரம். அரசே, பாமக சாதிவெறியர்களை- மணல் திருட்டுக் கும்பலைக் கைது செய். ஏப்-10 அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.